Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சங்கரலிங்க புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது72). இவரது தாய் மனோன்மணி என்ற வாழை மாரியம்மாள் (90).
மனோன்மணியின் கணவர் சேதுராமலிங்கம் இறந்து விட்டதால் தற்போது அவர் தனது மகன் ராமசாமி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ராமசாமி வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். மனோன்மணி வாசல் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மல்களை திருடி சென்றார். வலி தாங்க முடியாமல் மனோன்மணி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ராமசாமி எழுந்து ஓடி வந்தார். அதற்குள் மர்ம நபர் தப்பியோடி விட்டார். உடனே மனோன்மணியை சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக ராமசாமி சேர்த்தார்.
இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மூதாட்டி காதை அறுத்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் நகை மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.